வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேர் பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரில் அவர்கள் சிக்குண்டிருந்தநிலையில் மியன்மார் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக மியன்மாருக்கான இலங்கைதூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளை தொடர்ந்தே மியன்மார் அதிகாரிகள் இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தென்கிழக்காசிய நாடுகளில் இயங்கும் திட்டமிட்ட ஆள்கடத்தல் கும்பலிடம் சிக்கிய இலங்கையர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் கடந்த வியாழக்கிமை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

Share.
Exit mobile version