தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதியன்று மீண்டும் கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், தற்போதைய அரசியல் அமைப்பை மாற்ற விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களால் கொழும்பில் வெள்ளம் பாய்வதற்கு முன்னர் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version