மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

# பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்.

• அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

• மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை.

• கொழும்பு – பிரதானமாக சீரான வானிலை.

• காலி – பிரதானமாக சீரான வானிலை.

• யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை.

• கண்டி – சிறிதளவில் மழை பெய்யும்.

• நுவரெலியா – சிறிதளவில் மழை பெய்யும்.

• இரத்தினபுரி – சிறிதளவில் மழை பெய்யும்.

• திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை.

• மன்னார் – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Share.
Exit mobile version