அம்பலாங்கொட தர்மசோக பாடசாலையின் பிரதி அதிபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நேற்று (26) பெந்தர பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்த இரத்தக் கறைகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரதி அதிபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.

Share.
Exit mobile version