புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று முன்தினம் (25) இரவு மீண்டும் துபாய் நோக்கி விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் (25) இரவு 8:50 மணியளவில் துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அலிசப்ரி ரஹீம் துபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளதை விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டும் வௌியேறியுள்ளார்.

பெரும்பாலும் அவர் துபாயில் ஆரம்பித்துள்ள தனது நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வதிலேயே எதிர்காலத்தில் தனது கவனத்தை செலுத்தக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.

அத்துடன் அலி சப்ரி ரஹீம் ஐரோப்பிய நாடொன்றுக்கு குடிபெயர்வது தொடர்பில் ஆலோசித்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version