வெலிகமை, மதுராகொட பிரதேசத்தில் இன்றைய தினம் திருமணத்துக்காக காத்திருந்த இளம் பெண் ஒருவருக்கு ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

இன்று அதிகாலை அவரின் வீட்டுக்குச் சென்ற நபரொருவர் மணப்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான பெண் தற்போது மாத்ததறை மருத்துவமனையின் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிசைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிட் தாக்குதலுக்கு இலக்கான பெண் சிறிது காலத்துக்கு முன்னர் அதே ​பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார். எனினும் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக இடைநடுவில் அவர் தன் காதலை கைவிட்டுள்ளார்

இதன் காரணமாக சினமடைந்த முன்னாள் காதலனே குறித்த யுவதியின் மீது ஆசிட் தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் கொண்டுள்ள பொலிசார், தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Exit mobile version