மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான் குளப்பகுதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய நேற்று (25.05.2023) மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து குறித்த பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது,  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளதுடன்,  உள்ளூர் தயாரிப்பு துப்பாகி ஒன்றும் செடிகளையும் 2 பெரல் கோடா என்பவற்றை மீட்டுள்ளர்.

மீட்கப்பட்ட 2 பெரல் கோடைவை அந்த பகுதியில் அழித்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share.
Exit mobile version