இலங்கைக்கு தங்கம் மற்றும் கைப்பேசிகளை கடத்தி வந்தமைக்காக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு சுங்கத் திணைக்களம் அபராதம் விதித்திருந்தது.

இதனை அடுத்து அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று கூடிய கட்சித் தலைவர்கள், அவரை பதவி நீக்குவதற்கான பிரேரணையை கொண்டுவர முடிவு செய்தனர்.

எனினும் இந்த பிரேரணை எப்போது, யாரால் கொண்டுவரப்படும் போன்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Share.
Exit mobile version