மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக மர்ம நபர்கள் எச்சரிக்கை செய்த விடயம் காரணமாக வவுனியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் மகளிர் பாடசாலைக்குச் சென்ற மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த காவலாளியிடம் தங்களை பொலிசார் என்று இனம் காட்டியுள்ளனர். அதன் பின்னர் வவுனியா நகரப் பிரதேசத்தில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளனர்.

அத்துடன் அப்பிரதேசத்தில் இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதலாளிகள் நடமாடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவலாளி உடனடியாக பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கவே, அவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்

இச்சம்பவம் வவுனியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாணந்துறை, திக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version