காலியில் சிறைக்காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு சிறைக் கைதியொருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது

காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் இந்தச் சம்பவம் இன்று காலை நடைபெற்றுள்ளது

கராப்பிட்டிய மருத்துவமனையின் ஒன்பதாவது மாடியில் அமைந்துள்ள வார்ட் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கைதியொருவரே தப்பிச் சென்றுள்ளார்

அவருக்குப் பாதுகாவலாக இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கடமையில் இருந்தபோதும் அவர்களை சூட்சுமமாக ஏமாற்றி விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Share.
Exit mobile version