கனேடிய பல்கலைக்கழகத்தில் உயர் கற்கை நெறிகளிலும் தொழிற்துறைகளிலும் இணைப்பதாக தெரிவித்து சுமார் 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களான பெண் மற்றும் ஆணின் மோசடியில் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு அருகில் நபர் ஒருவர் தம்மைத் தாக்கியதாக சந்தேக நபரான பெண் மற்றும் ஆண் இருவரும் செய்த முறைப்பாட்டையடுத்து அவர்கள் மூவரையும் தலங்கம பொலிஸுக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், இந்த பாரிய மோசடித் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version