இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியா அரசாங்கம் அறிவித்த ஹஜ் கோட்டாவை விட கடந்தாண்டு குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், இலங்கையர்கள் இந்த ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் முதல் குழு எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.

புனித நகரமான மக்காவில் ஹஜ் செய்வது இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

Share.
Exit mobile version