ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையினை வந்தடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று (23) இரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது போட்டி ஜூன் 04ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 07ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும்.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன் நடக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.

Share.
Exit mobile version