சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட் அலி சப்ரி எம்.பி., அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் பெருந்தொகையான மொபைல் போன்களை எடுத்து வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்

அவரிடம் இருந்து 7 கோடியே 40 லட்சத்து 96 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்றரைக் கிலோ தங்கம் மற்றும் 42 லட்சம் ரூபா பெறுமதியான மொபைல் 91 போன்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து அவருக்கு 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகை செலுத்தப்பட்டவுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version