க.பொ.த உயர்தரப் பரீட்சை – 2022 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றார்.

தற்போது அனைத்து 63 பாடங்களுக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்துள்ளதாகவும், பன்னிரண்டு பாடங்களின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணியை முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், க.பொ.த (சா/த) பரீட்சையை திட்டமிட்டபடி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version