இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,844 நிலையங்களில் இடம்பெறுகிறது.

இந்த வருடம் இப்பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்தி கள் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் 110,367 தனியார் விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் 542 பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Share.
Exit mobile version