பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 9 பேர் பலாலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டியில் நீதிமன்ற உத்தரவை மீறி விகாரை காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் இன்று (23) மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சட்டத்தரணி ஒருவரும், நான்கு பெண்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version