பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துமாறு கோரி இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்க தலைமையகத்திற்கு முன்பாக இன்று (23) பிற்பகல் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அங்கிருந்து மாணவர்கள் கண்டி நகரம் வரை முன்னெடுக்க தீர்மானித்திருந்த போது பேரணியை கலைக்க பேராதனை வைத்தியசாலை அருகில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டு பேரணியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Share.
Exit mobile version