இலங்கையில், வட மாகாணம், மொனராகலை மாவட்டம், வடமேல் மாகாணம் உட்பட 11 மாவட்டங்களுக்கு கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

வெப்ப பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர்கள் எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார்கள்.

திறந்தவெளிகளில் தொழில் செய்பவர்கள், தலைக்கு தொப்பி, தலைப்பாகை போன்ற அங்கிகளையும், நேரடி வெப்ப தாக்கத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்கான அங்கிகளையும் அணியுமாறு சுகாதார பிரிவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதே நேரம், கூடுதலானu நீரை அருந்துமாறும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version