டெங்கு ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாகாண ஆளுநர்கள், மாகாண ஆணையாளர்கள், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களை அழைத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பொதுமக்களின் தீவிர ஆதரவை கோருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version