உமா ஓயா நீர் மின் நிலையத்தின் அலகு 1 இன் மின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் அலகு 2 இன் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக,120 மெகாவோட் நீர் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version