தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 3,348 இதர நிலைகளும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையின் 1,731 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version