தற்போதைய காய்ச்சலுக்கு பாராசிட்டமால் தவிர்ந்த வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது வைத்தியர்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என நிபுணர் வைத்தியர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version