கல்கிஸ்ஸை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்திற்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, குறித்த நிறுவனத்தினால் 42 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நபரை கைது செய்துள்ளனர்.

Share.
Exit mobile version