மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் இதுவரை 36,100 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்ததாக தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் இதுவரை மொத்தம் 9,323 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளதுடன், அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 477,277 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Share.
Exit mobile version