வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்யதுகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

• கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்.

• வடமேல் மாகாண ஆளுநர் – முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

• வடக்கு மாகாண ஆளுநர் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

Share.
Exit mobile version