தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின்படி, 02.05.2023 முதல் தேசிய விலங்கியல் பூங்காத் திணைக்களத்தின் விலங்கியல் பூங்காவில் விலங்குகளுக்கு உணவு வழங்குதல், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது மற்றும் உள் போக்குவரத்து வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் கீழ்க்கண்டவாறு திருத்தப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version