களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேற்படி நபர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியின் உரிமையாளரின் மனைவியை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தோழி, தோழியின் காதலன் மற்றும் பிரதான சந்தேக நபரின் வாகனத்தைச் செலுத்தி சென்ற நபர் ஆகியோரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், அவருக்கு முன்னதாகவே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version