அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினர் நேற்று (21) இரவு தீ வைத்துள்ளனர்.

நேற்று (21) நண்பகல் முதல் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வந்த போதிலும், கையிருப்பை பராமரிக்க தவறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இனந்தெரியாத கும்பலால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் இரண்டு மாடி வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உடனிருந்ததாகவும், தீயினால் இரண்டாவது மாடி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை, அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version