பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 540 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை சிறைச்சாலை வீதியில் பி.டி.ஐ. கட்சி அலுவலகத்திலும் பொலிஸார் சோதனை நடத்தினர், மேலும் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட வேண்டிய கட்சி உறுப்பினர்களின் பட்டியலும் பல பொலிஸ் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று காலை லாகூரில் உள்ள சமன்பார்க்கில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.

Share.
Exit mobile version