மலையக ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹட்டனுக்கும் நானு ஓயாவிற்கும் இடையிலான ரயில் பாதையில் கிரேட் வெஸ்டன் மற்றும் வடகொட நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக நேற்று (12) பிற்பகல் முதல் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது.

ரயில் பாதையை சீர்செய்யும் நடவடிக்கையில் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version