அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் காயமடைந்த 4 பேர் தற்போது மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தேயிலை செடிக்குள் இருந்த குளவிக்கூடு களைந்ததனாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Share.
Exit mobile version