அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 350 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளனர்.

இதன் காரணமாக நாட்டில் உள்ள பல கிராமிய வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் 350 பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் ஓய்வு பெற்றால் குறைந்தது 50 கிராமிய வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 350 பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், 400 பட்டதாரி மருத்துவ அலுவலர்கள், 300 சிறப்பு மருத்துவர்கள் என மொத்தம் 1000 மருத்துவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெற உள்ளனர்.

Share.
Exit mobile version