பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி கானை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவர் காவலில் வைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடந்ததால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version