காரின் உதிரி பாகங்கள் எனக் கூறி ஜப்பானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மிட்சுபிஷி ஜீப் வண்டிகளும் சுபாரு ரக கார் ஒன்றும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த 5 வாகனங்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் இதன் இறுதி மதிப்பீட்டை பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்துக்கு வாகன உதிரிப்பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படவை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version