நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விசேட யோசனையொன்றை கையளித்துள்ளார்.

நாட்டின் பலவற்றை முக்கியப்படுத்தி இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் பணிபுரியும் அல்லது வெளிநாட்டில் வர்த்தகம் செய்யும் இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இரண்டு வருட காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியில் 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடுவதற்கு நான்கு நன்மைகள் முன்மொழிவுகளை சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அந்த வைப்புத் தொகைகளுக்கு வருடாந்தம் 10 வீதம் இலங்கை ரூபாயில் வட்டி செலுத்தப்பட வேண்டும் மற்றும் பணம் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வேறு ஏதேனும் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

பிரேரணைகளின் கீழ் சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில், அத்தகைய நிலையான வைப்புத் தொகையை செலுத்தும் நபருக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க டொலர் 25,000 பெறுமதியான வாகன இறக்குமதி உரிமத்தை வழங்குவது மற்றும் அந்த வாகனத்திற்கு அரசாங்கத்திற்கு அமெரிக்க டொலர் 10,000 நிலையான வரி செலுத்த வேண்டும்.

மேலும், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்கு துணைபுரியுமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் ஆறு யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எரிசக்தி செலவீனங்களைக் குறைத்தல், எரிவாயுவை விடுவித்தல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், உணவு உற்பத்தி, வங்கி முறையை உறுதிப்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள சமுர்த்தி பெறுபவர்கள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரியிடம் இதே முன்மொழிவை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version