பேஸ்புக் சமூக ஊடகத்தில் சிறுமிகளின் புகைப்படங்களை பதிவிட்ட நபர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யடவர வத்தேகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் “நிலு நிலு” என்ற போலி கணக்கை உருவாக்கி அதில் சிறுமிகளின் படங்களை பதிவிட்டுள்ளார்.

40 வயதுடைய சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் கணக்கு எழுத்தராக பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இரண்டு முறை திருமணம் செய்து தற்போது விவாகரத்து பெற்றவர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version