நிலைய பொறுப்பதிகாரிகளின் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மலையக புகையிரத சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணிக்கும் பொடி மெனிகே ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.

புகையிரத நிலையங்களினால் பயணச்சீட்டு வழங்கப்படாமையால் பொடி மெனிகே ரயிலில் பயணிகள்
இலவசமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உடரட்ட ரயில்பாதையில் பல ரயில்கள் சேவையில் ஈடுபடவில்லை காரணமாக பொடி மெனிகே ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் என பெருந்தொகையான மக்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version