மண்சரிவு எச்சரிக்கையானது நாளை காலை 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும் நாளை காலை 9 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

மேலும், காலி மாவட்டத்தில் உள்ள பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளிலும், யட்டியந்தோட்டை, ரம்புக்கனை, தெரணியகல, மாவனெல்ல, கேகாலை மற்றும் கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிப்பவர்களுக்கும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version