களுத்துறையில் மாலைநேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று (09) மாலை வரை இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version