1990-ம் ஆண்டு துணிக்கடை ஒன்றில் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாக்கல் செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் ஜீன் கரோல் என்பவர் ட்ரம்புக்கு எதிராக தொடுத்த சிவில் வழக்கில் நடுவர் மன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

துணிக்கடையின் டிரஸ்ஸிங் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி, இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ட்ரம்பை குற்றவாளி என தீர்ப்பளித்த உரிய நடுவர் மன்றம், குறித்த ஊடகவியலாளருக்கு 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்குமாறும் டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிட்டுள்ளது.

Share.
Exit mobile version