தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியசாலை வீதி பகுதியில் இருவர் மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது, தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவரை படுகாயப்படுத்தியjாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சத்பவத்துடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மெலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Exit mobile version