பொலன்னறுவை-சுங்காவில், நெலும்புர பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுங்காவில், நெலும்புர பகுதியைச் சேர்ந்த 30 வயதான இர்பான் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புலஸ்த்திகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share.
Exit mobile version