இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கை அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆம் சரத்தின் அடிப்படையில் அமைச்சரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மின்சார கட்டண அதிகரிப்பு யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்டது முதல், ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version