2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நெத் வானொலியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுபத்தைந்து வருடங்களாக இந்நாட்டின் நெருக்கடியான பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகளை தாம் முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

மதத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version