கடந்த சனிக்கிழமை 06 ஆம் திகதி தாமரை கோபுரத்திற்கு 12,204 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் அதிகளவான பார்வையாளர்கள் வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்தாண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட நிலையில் 815,982 பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர்.

13,057 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version