அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி அதிகளவான மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்பனை செய்த சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை அதிகளவான பியர் மற்றும் மதுபான போத்தல்கள் சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி விற்பனையில் ஈடுபடுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகரின் வழிநடத்தலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதன் போது 37 வயதான துறைநீலாவணை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதான நபரிடமிருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் பல இலட்சம் பெறுமதியானவை எனவும் அத்துடன் அளவிற்கு அதிமான மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதான சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version