வெசாக் விடுமுறைக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கு போதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் பேருந்துகள் இன்று (07) வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெசாக் விடுமுறையை முன்னிட்டு அனுராதபுரம் மற்றும் பதுளைக்கு இரண்டு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version