நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயா, களனி, நில்வளவை, களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 67 வீதத்தில் நிரம்பியுள்ளன.

எனினும், மழைவீழ்ச்சியின் தரவுகளின்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த முக்கிய ஆறுகளும் வெள்ள மட்டத்தை எட்டும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version