நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற 1083 சமுர்த்தி வங்கிகளிலும் “ பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழி கோலுவோம் “ எனும் தொனிப்பொருளுடன் கூடிய புத்தாண்டு விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.30 மணியளவில் கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வளாகத்தில் இந்நிகழ்வு மிகவும் கோளாகலமாக நடைபெற்று முடிந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கல்முனை பிரதேச செயலாளர்
J.லியாக்கத் அலி கலந்துகொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் விசேட அதீதிகளாக A.R.M. அஸ்மி – MOH – கல்முனை தெற்கு, M.H.M அனீசார் – அதிபர் றோயல் வித்தியாலயம் – கல்முனைக்குடி, கௌரவ அதீதிகளாக A.R.M. சாலிஹ் – தலைமைப்பீட முகாமையாளர் கல்முனை 1, A.M.S.நயீமா கருத்திட்ட முகாமையாளர் -கல்முனை முகாமைத்துவ பணிப்பாளர் – கல்முனை, S.பரீரா, A.L.M.நஜீப் சமுர்த்தி வங்கி முகாமையாளர் – மருதமுனை, M.A.M. பைசால் – சமுர்த்தி வங்கி முகாமையாளர் நற்பிட்டிமுனை, இன்னும் பல முக்கிய பிரமுகர்கள்,ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Share.
Exit mobile version